பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டு மனைகளுக்காக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்