சென்னை: ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் என்கவுன்டர் வழக்கில் பொன்னேரி மாஜிஸ்திரேட் இன்று விசாரணை நடத்த உள்ளார். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் நேரில் பார்வையிட்டும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளார். என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் உடல்களை பெற பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் இருவரது உடல்களும் வைக்கப்பட்டு உள்ளது.