பொன்னேரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அண்ணா சிலை அருகே பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பொன்னேரி நகராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். இதில் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நெடுஞ்செழியன், புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் து.பாரதிதாசன் மற்றும் பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இடியுடன் கொட்டிய கனமழை

பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை