இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமும் இன்றி மதம், இனம், ஜாதி சமூக தாக்கமும் இன்றி வாக்களிப்போம் என உறுதி அளிக்கிறோம் என உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, அங்குள்ள அனைவரும் விழிப்புணர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இதில் பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், பொன்னேரி கோட்டாட்சியர், பொன்னேரி வட்டாட்சியர், பொன்னேரி நகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.