பொன்னேரி அருகே கடைக்கு சென்ற தாய் திடீர் மாயம்: போலீசில் மகன் புகார்

 

பொன்னேரி: பொன்னேரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் கடைக்கு சென்ற தாய் திடீரென மாயமாகிவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசில் மகன் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன பெண் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பொன்னேரி அருகே சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (49). இவருக்கு கோகுல் (31) என்ற மகன் உள்ளார். இதற்கிடையே, கடந்த 14ம் தேதி தாய்க்கும் மகனுக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த தாய் தேன்மொழி, பொன்னேரி பஜாரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு, அவர் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை மகனும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று மாலை பொன்னேரி போலீசில் மகன் கோகுல் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன தேன்மொழியின் புகைப்படத்தை பல்வேறு காவல் நிலயங்களுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்