சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பை மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை ஏப்ரல் 15க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இறுதி விசாரணை நேற்று முதல் மார்ச் 15 வரை நடைபெறும் என்று தேதி நிர்ணயித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 முதல் 19ம் தேதிகளில் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி நீதிபதி தள்ளிவைத்தார்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு