தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான கிரிமினல்களையும் பாஜவில் சேர்த்து பொறுப்பை வழங்கி, ஒன்றியத்தில் உள்ள ஆட்சியின் அதிகாரம், பண பலம் இவற்றை கொண்டு கட்சி நடத்தி வரும் அண்ணாமலைக்கு பெரியார் மண்ணின் உண்மையான கள நிலவரம் இன்னும் கணக்கிட முடியாதது அவலமாகும். இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ெபரியாரின் கருத்தியியல் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் சமூக நீதியின் சின்னமாக விளங்கக்கூடிய பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தின் உச்சம். உடனடியாக அண்ணாமலை இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.