திருமண விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பொருளாளர் எஸ்.ஜெகதீசன், என்.சுந்தர்ராஜ், ஜெகன் முருகன், தலைமை நிலைய செயலாளர் ரஜினிராஜ், அமைப்பு செயலாளர் நாகராஜ், சமூக சத்திரியர் பேரவை மாநில இணை பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், தொகுதி தலைவர் லயன் சீனு, காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ரகுநாதன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு, சமூகநீதி சத்திரியர் பேரவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்துக்கு வந்தவர்களை பொன்குமார், மைதிலி பொன்குமார், கே.வினோத்குமார், ரேவதி வினோத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.