பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹1000: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இடம் பெறவில்லையே என கேள்வி எழுந்தது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தன.

ஜனநாயக உணர்வு கொண்ட மாநில அரசு, கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசாக ₹1000 அறிவித்திருப்பதற்கு கட்சியின் மாநில செயற்குழு நன்றி பாராட்டி வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு