சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.2,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100ஆக அதிகரித்துள்ளது.