கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொங்கல் விழாவையொட்டி தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களை நோக்கி மக்கள் பயணிக்கின்றனர். மாநில எல்லையான ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.