காத்திருந்த அனைவருக்கும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தரும்படியும், கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை அமைக்க வேண்டும் எனவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதுபோல, எந்தவொரு ஏற்பாட்டையும் இதுவரை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை என பயணிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். மேலும், ஜன.12ம் தேதி பயணம் மேற்கொள்ள இன்றும், ஜன.13ம் தேதி பயணம் மேற்கொள்ள நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.