விரைவு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜன.11ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இன்றும், ஜனவரி 12ம் தேதிக்கு நாளை மறுநாள், ஜனவரி 13ம் தேதி பயணிக்க வரும்15ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜன.14ம் தேதி பயணிக்க செப்.16ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.