சென்னை: தொழிற்சங்க போராட்டம் நடந்தாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.