சென்னை : பொங்கல் பரிசுத்தொகுப்பு யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டோக்கன் வழங்கிய தேதியில் ரேஷன் கடைக்கு மூடப்பட்டிருந்ததால், வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.