சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு. சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியமாக ரூ.3,000 வரை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 தரப்படும்.