இதற்காக திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் மர ஏணிகள் செய்து திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். எட்டு அடி முதல் 20 அடி உயரம் ஏணி வரை விற்பனை செய்கின்றனர். இரும்பு மற்றும் அலுமினிய ஏணிகளை பயன்படுத்தும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் மூங்கில் ஏணிகளால் எந்தவித விபத்துகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏணிகள் தயாரிக்கும் பிரசாந்த்கூறு கையில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்மூங்கில் மரங்கள் அதிகம். தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே மூங்கில் மரங்களை வெட்டி காய வைத்து ஏணிகள் தயாரிப்போம். அதனை சரக்கு வாகனங்களில் ஏற்தி ஊர் ஊராக சென்று அங்கு நடக்கும் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம். எட்டு அடி முதல் 20 அடி உயர ஏணி வரை விற்பனை செய்கிறோம். ஆயிரம் ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை ஏணிகள் விலை வைத்து விற்பனை செய்கிறோம். நகர்ப்புறங்களில் அதிகமாக ஏணிகள் விற்பனையாகும்.
ஒரு சரக்கு வாகனத்தில் அதிகபட்சமாக 50 முதல் 70 ஏணிகள் வரைஏற்றலாம் என்றார்.