மானாமதுரை முதல் நாகர்கோவில் வரை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள் அங்கே விற்பனைக்காக கோட்டையூரில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட பொருட்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையான வாழ்வியல் முறைக்கு தற்போது மக்கள் திரும்பி வருவதால் மண்பாண்டங்கள் அதிகளவில் விற்கப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.