Friday, September 20, 2024
Home » பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி, விற்பனை தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி, விற்பனை தீவிரம்

by Lakshmipathi
Published: Last Updated on

*ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் அதிகரிப்பு

*சக்கம்பட்டி நெசவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.‌சுப்புலாபுரம் பகுதிகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்டன் சேலைகள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60க்கு80, 80க்கு60 நம்பர், நைஸ் ரகங்களின் பிளைன், புட்டா, கோர்வை, ஸ்கிரீன் பிரின்டிங், பேடு ரகங்கள், கட்டம் உள்ளிட்ட பல டிசைன்களின் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 லட்சம் மதிப்பிலான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு விசைத்தறி இயந்திரத்தில் 2 நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 லட்சம் மதிப்பில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் அவரது வீடுகளில் விசைத்தறிகள் அமைத்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விருதுநகர், ஈரோடு, போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சேலைகள் ஒவ்வொரு வாரமும் ஈரோட்டில் நடைபெறும் ஜவுளி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக வந்தும், ஆர்டர் மூலமும் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

பொதுவாக இந்த பகுதிகளில் வருடந்தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் காட்டன் சேலைகள் புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். அந்த வகையில் இந்த வருடம் பண்டிகைகளுக்கும்‌ புதிய ரகங்கள், டிசைன்கள்‌ உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முடிவு செய்தனர். பண்டிகை காலங்கள் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக சேலைகள் உற்பத்தி தொடங்கும். இதேபோல் கோடை காலத்திலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் போதும் உற்பத்தி அதிகளவில் தொடங்குவார்கள்.

இந்தநிலையில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம்‌ பகுதிகளில் அதிகளவு காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைகள் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே பொங்கல் பண்டிகைக்கென காட்டன் சேலைகள் உற்பத்தி தொடங்கி விட்டது. இந்த காட்டன் சேலைகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருவதுடன் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செயய்ப்பட்ட காட்டன் சேலைகள் அதிக அளவு வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும்.

கேரளா மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தங்களது குடும்பத்திற்க்கு தேவையான சேலைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். இந்த காட்டன் சேலைகளை பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் அதிகளவு வாங்கி செல்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் பண்டிகையை விழாவும் தொடர்ந்து நடைபெறும். இதனால் புதிய ரக காட்டன் சேலைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் சேலைகளால் நெசவாளர்களில் உற்பத்தி வேகம் அடுத்த பண்டிகை காலத்திற்க்கு உயர்த்தி தரும். மேலும் தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் காட்டன் சேலைகள் வாங்குவதற்கு பெண்கள் அதிக அளவு ஆர்வமுடன் இருக்கின்றனர். அதற்கேற்றார் போல் சக்கம்பட்டி டி.சுப்புலாபுரம் பகுதிகளில் பல்வேறு டிசைன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் தற்போது பங்குனி, சித்திரை மாதம் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருவதால், பெண்கள் கோவில் திருவிழாவிற்கு காட்டன் சேலைகள் எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக சக்கம்பட்டி டி.சுப்புலாபுரம் பகுதிகளில் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரித்ததுடன் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகளுக்கு அதிகளவு மவுசு இருக்கிறது. இதனால் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆன்லைன் மூலம் காட்டன் சேலைகள் விற்பனையை செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் விற்பனை வாடிக்கையாளர் மத்தியில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமால் விற்பனை ரொம்ப ஈஸி

வாடிக்கையாளர் விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் முறையில் சேலைகள் வாங்கி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் சேலையை படம் பிடித்து பேஸ்புக், வாட்ஸ் அப், இ-மெயில், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேவைப்படும் நபரின் தொடர்புக்கு பின் விலை நிர்ணயம் செய்து வியாபார ஆர்டர் பெற்று பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் சேலைகள் விற்பனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர் ஊராக சென்று கடைகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து ஆர்டர் வாங்குவதை விட ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெறுவது எளிதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi