புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி தற்கொலை செய்து கொண்டார். காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் (57) கழிவறையில் தற்கொலை செய்துள்ளார். கைதி விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி காணாமல்போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.