அப்போது தோட்டங்களில் கொள்முதல் விலையாக ஒரு இளநீர் ரூ.42 இருந்தது. பின்னர் பெய்த கோடை மழை, தென்மேற்கு பருவமழை காரணமாக இளநீர் உற்பத்தி பாதித்து, விலையும் ரூ.35 ஆக சரிந்தது. இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தோட்டங்களில் இளநீர் அறுவடை துவங்கியுள்ளது. இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டங்களில் இளநீர் விளைச்சல் குறைவாக இருப்பதால், நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.40ஆக அதிகரித்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ந்து அடைந்துள்ளனர். இந்த நிலை வடகிழக்கு பருவமழை வரை இருக்க வாய்ப்புள்ளது என்றார்.