கடந்த மாதம் வரை இளநீருக்கு அதிக கிராக்கி இருந்தது. இதனால், பண்ணை நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.33 முதல் ரூ.35 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்ததனர். ஆனால், கடந்த 2 வாரத்துக்கு மேலாக, மகாராஸ்டிரா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மழை பெய்ய துவங்கியது. இதன் காரணமாக அம்மாநிலங்களுக்கு பொள்ளாச்சியில் இருந்து இளநீர் அனுப்புவது சற்று குறைந்தது.
மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் சாரல் பெய்வதால், பிற மாவட்டங்களுக்கும் இளநீர் அனுப்புவது குறைந்து உள்ளது. இதனால், விற்பனை மந்தமாகி உள்ளது. தற்போது தோட்டத்தில் பண்ணை விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக நெட்டை, குட்டை, வீரிய ஒட்டு ஆகிய வகை இளநீர் ரூ.30க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்தால், இளநீரின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என, ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.