பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி உயிரிழப்பு..!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலைவிபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி(58) இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது சொந்த வேலை காரணமாக அவரது வீட்டிலிருந்து காரில் வந்த நீதிபதி உடுமலை சாலையில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நீதிபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் அப்பகுதியில் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். மேலும் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த நீதிபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் திடீர் ஓய்வு அறிவிப்பு

எல்லை தாண்டி வந்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

பல்லாவரம் அருகே தறிகெட்டு ஓடிய கனரக லாரி வீட்டின் மீது மோதல்; 3 பெண் படுகாயம்