கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட வீடுகள், கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் விதி மீறி கட்டடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிகாரிகள் சீல் வைக்க வந்தபோது மாகாலிங்கபுரம் பகுதி மக்கள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 66 கடைகளுக்கு சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆனால் 40 கடை உரிமையாளர்கள் இடைக்கால தடை பெற்றுள்ளனர். மீதமுள்ள 26 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.