பொள்ளாச்சியில் விதிமீறிய கட்டடங்களுக்கு சீல்வைப்பு..!!

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட வீடுகள், கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் விதி மீறி கட்டடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிகாரிகள் சீல் வைக்க வந்தபோது மாகாலிங்கபுரம் பகுதி மக்கள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 66 கடைகளுக்கு சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆனால் 40 கடை உரிமையாளர்கள் இடைக்கால தடை பெற்றுள்ளனர். மீதமுள்ள 26 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இந்திய ஒற்றுமை பயணத்தை விளக்கி ஒருவார காலத்திற்கு தெருமுனைக் கூட்டங்கள்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா நிறைவு