சென்னை: அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். நிவாரணம் கேட்டால் ஒன்றிய அரசு அரசியலாக பார்க்கிறது; அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் உடனடியாக நிவாரணம் அளித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் சேதமடைந்த பயிர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். பயிர் காப்பீட்டு தொகை நிவாரணத் தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.