சாவில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினர்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்

சென்னை: சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போல் மூடி மறைக்கப் பார்த்த அரசு போல் செயல்படவில்லை. துணிச்சலுடன் களத்தில் நின்று எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசே மக்களுக்கானது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் வருந்தத்தக்கது; அரசின் உதவிகள் அக்குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். விஷச் சாராய விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை என அரசு எச்சரித்துள்ளது என்று அவர் கூறினார்.

 

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்