மூன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை

சென்னை: 3 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். அச்சுறுத்தல் இல்லாதபட்சத்தில் சிலருக்கு வாபஸ் பெறப்படும்.

இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய 3பேரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரின் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!