காவல்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட வழக்கில் தனிநபர் ஒருவரின் பெயரை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: காவல்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட வழக்கில் தனிநபர் ஒருவரின் பெயரை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் tnpolice.gov.in-ல் மனுதாரரின் பெயரை 2 வாரத்தில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கில் tnpolice.gov.in-ல் இருந்து தன் பெயரை நீக்க உத்தரவிடக் கோரி தஞ்சையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். குற்ற வழக்குகளில் இருந்து அனைத்து ஆவணங்களிலும் மனுதாரரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. tnpolice.gov.in-ல் மட்டும் மனுதாரரின் பெயரை ஏன் நீக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மனுதாரரின் பெயரை நீக்கிய பின், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

Related posts

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து