போலீஸ் ஸ்டேஷன் முன் பாமக எம்எல்ஏ தர்ணா

ஓமலூர்: ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி, பூமிநாயக்கன்பட்டி கிராமத்தின் வழியாக, ஓமலூரில் இருந்து இரும்பாலை மற்றும் அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மாவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள அரசமரத்துகுட்டை பகுதியில், பயணிகள் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடத்தை மர்ம நபர்கள் இடித்து அகற்றி விட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து, ஓமலூர் டிஎஸ்பி அலுவலக பகுதியில் இருந்து, எம்எல்ஏ அருள் தலைமையில், பாமக நிர்வாகிகள் மேட்டூர் சாலையில் பேரணியாக சென்றனர். பின்னர், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குவந்த சேலம் மாவட்ட கூடுதல் எஸ்பிக்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து எம்எல்ஏ உள்ளிட்டோர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை