வாகன சோதனையின்போது பைக் மோதி காவலர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் ஒன்று வாகண தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் கபில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த காவலர் கபில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பைக்கை ஓட்டி வந்த செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாலு நகர், பாரதிதாசன் என்பவரின் மகன் சரண்குமார் (24) என்வரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!

சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!

செஃப் ஏரியா!