நந்தினி அவரது தாய் மாமா வினய் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 01.09.2023 அன்று அவரது பாட்டியிடம் சண்டை போட்டுவிட்டு யாரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பெண்ணின் தந்தை முருகேஸ் என்பவர் நந்தினி காணாமல் போனது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் கரங்கள் காவல் குழுவினர் ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, மீட்கப்பட்ட நளினியின் தந்தை, தாய், கணவர் மற்றும் ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலைய காவலர்களை சென்னை வரவழைத்து நேற்று (09.01.2024) சென்னை பெருநகர காவல் துணை ஆணையாளர் முனைவர்.மணிவண்ணன், (தலைமையிடம்) மற்றும் காவல் உதவி ஆணையாளர் கண்ணன், (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) ஆகியோர் முன்னிலையில் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார்.
01.09.2023 அன்று ஆந்திர மாநிலத்தில் காணாமல் போன 19 வயது பெண்ணை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினர் மற்றம் தன்னார்வலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.