Monday, September 9, 2024
Home » புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை!

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை!

by Francis

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவரங்குளம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சென்ற ஆலங்குடி உதவி ஆய்வாளர் மகாலிங்கத்துக்கு கையில் வெட்டு விழுந்துள்ளது. உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ரவுடி துரை வெட்டியபோது தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை. ரவுடி துரை என்கிற ( துரைசாமி) மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 70 வழக்குகள் உள்ளன. 2023-ல் திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்றபோது தப்பி சென்றவர் ரவுடி துரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

You may also like

Leave a Comment

twenty − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi