ஈரோடு: ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்துத்துவ பாசிசம், வேர்களும் விழுதுகளும் நூலை ஈரோடு புத்தக காட்சியில் விற்கக்கூடாது என மிரட்டியதாக புகார் எழுந்தது. புகார் எழுந்ததை அடுத்து தனிப்பிரிவு காவலர் மெய்யழகனையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.