தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு!

ஈரோடு: தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார். காங்கேயத்தில் நேற்று இரவு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சி கொடிகள் கட்டப்பட்டன. தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் வேட்பாளர் விஜயகுமார், தமாகா நிர்வாகிகள் தர்மராஜ், சுரேஷ் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்