ஆவடி: ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு உட்பட்ட கடைகளில் 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.