இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் திவ்யபாரதி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் திவ்யபாரதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பாக்யலட்சுமி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சொரகொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், திவ்யபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.