அவர்களது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கிவிட்டு, அவ்வழியாக சென்ற ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். விசாரணையில், போதை ஆசாமிகள் இருவரும் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, காவாங்கரை தெருவை சேர்ந்த பவானிசங்கர் (29), அவரது அண்ணன் மாரிமுத்து (31) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.