Thursday, June 27, 2024
Home » காவல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆய்வு சைபர் கிரைம் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காவல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆய்வு சைபர் கிரைம் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

by Lakshmipathi

*எஸ்பி உத்தரவு

திருப்பதி : காவல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் நடந்த ஆய்வில் சைபர் கிரைம் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று எஸ்பி ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார். திருப்பதி எம்ஆர் பள்ளியில் உள்ள காவல்துறை கட்டளைக் கட்டுப்பாட்டு அறையில் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், ஐடி மைய ஊழியர்கள் மற்றும் சைபர் செல் ஊழியர்களுடன் எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் குற்றங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகுக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களின் சிசிடிஎன்எஸ் ஆபரேட்டர்களிடம் எல்லா நேரங்களிலும் இருக்குமாறும், எந்தப் பிரச்சனையானாலும் உடனடியாகத் தீர்க்கவும், காவல்துறையின் செயல்திறனை பாதிக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஐடி முக்கிய நிபுணர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைபர் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட சைபர் கிரைம் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மோசடி செய்யப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக திருப்பித் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொபைல் ஹன்டுவின் மூலம் சிறந்த சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன மொபைல் போன்களை மீட்க வேண்டும். கட்டளைக் கட்டுப்பாட்டு அறை மற்றும் சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வரும் புகார்தாரர்களிடம் கண்ணியமாகப் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய காலத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் அன்பை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி ஸ்ரீ வெங்கடராவ் நிர்வாகம், எஸ்பி டிஎஸ்பி வெங்கடாத்ரி, சிஐக்கள் சீனிவாசலு கட்டுப்பாட்டு அறை, அமர்நாத் சமூக ஊடக கண்காணிப்பு, ஆர்ஐ ரமணா ரெட்டி நலம் மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டு அறை, ஐடி கோர், சைபர் கிரைம் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi