Tuesday, September 17, 2024
Home » காவல்துறையில் கழிவுசெய்த வாகனங்கள் 21ம் தேதி ஏலம்

காவல்துறையில் கழிவுசெய்த வாகனங்கள் 21ம் தேதி ஏலம்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்-4, இரு சக்கர வாகனங்கள்-7) வரும் 21ம் தேதி காலை 11.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 20ம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முன் பணமாக ₹1000 செலுத்தி பதிவு செய்து கொண்டு, ஏலத்தில் பங்கு பெறுவதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களை ஏலத்தில் எடுத்தவர் உடனடியாக ஏலத்தொகை ரொக்கமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi