சென்னை: 24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.மணிகண்டன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், எஸ்.குத்தாலிங்கம், எஸ்.விஜயகுமார், ஜி.கார்த்திகேயனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. சென்னை தியாகராயர் நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.