செங்கல்பட்டு: காவல் ஆய்வாளர் முத்திரையை பயன்படுத்தி போலி கையொப்பம் போட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கத்தில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே சேம்புலிபுரம் பகுதியில் மது விற்ற குருசாமி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது.
வங்கி கணக்கை விடுவிப்பது பற்றி, காவல் ஆய்வாளர் மங்கள பிரியாவிடம் கேட்டபோது, நீதிமன்றத்தை அணுக கூறியுள்ளார். கூவத்தூருக்கு மாறுதலாகி சென்ற காவலர்கள் கோபிநாத், மணிகண்டனிடம் குருசாமி ஆலோசனை கேட்டுள்ளார். எனது வங்கி கணக்கை மீண்டும் இயக்க உதவி செய்தால், ரூ.1.50 லட்சம் கமிஷனாக தருகிறேன் என குருசாமி கூறியுள்ளார். கமிஷனுக்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போலியாக போட்டு குருசாமியிடம் காவலர்கள் கொடுத்துள்ளனர்.