பேரையூர், ஏப். 27: பேரையூர் அருகே ஆண்டிபட்டி- சொக்கம்பட்டி செல்லும் சாலைப் பிரிவு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 80 மீட்டர் நீள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு திருடிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பேரையூர் மின்பகிர்மான கழக உதவி பொறியாளர் பாரூக் ஹுசைன் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.