கள்ளக்குறிச்சி: விஷ சாராய வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜரான நிலையில் சற்று நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.