விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக

சென்னை: விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராயம் விற்றவர் மட்டுமின்றி, அதனை தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சரின் உன்னத நோக்கத்திற்கு இடையூறாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்