இதனை சுதாரித்த டிரைவர் ரபீக் லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள பாறைகள் மீது மோதி வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரபீக், அவருடன் வந்த கிளீனர் சீனு(30) ஆகியோருக்கு லோசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் போக்குவரத்தை சரி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.