வாஷிங்டன்: கவிஞர் அறிவுமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் “உலகத் தமிழ்ப் பீட” விருது வழங்கப்பட உள்ளது. 37-வது பேரவை விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு உலகத் தமிழ்ப் பீட விருது வழங்கப்பட உள்ளது. வட அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது உலகத் தமிழ்ப் பீட விருது. விருது பெறுவோருக்கு இந்திய மதிப்பில் ரூ.12.50 லட்சம் ரொக்கமும் நினைவு கேடயமும் வழங்கப்படும்.