சென்னை: மகனின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காக போக்சோ வழக்கு கைதிக்கு பாதுகாப்பின்றி விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்சோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ் குமாருக்கு ஐகோர்ட் பாதுகாப்பின்றி விடுப்பு வழங்கியது. முதல் மகனின் மருத்துவ செலவு, இளைய மகனின் படிப்பு செலவுக்கு நிதி திரட்டுவதற்காக கணவருக்கு விடுப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. கணவர் ராஜேஷ்குமாருக்கு 21 நாட்கள் சிறை விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி மனைவி நிரோஷா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.