போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொளிகளைத் திரையிட உத்தரவு

நம்நாட்டில் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை உள்ளிட்ட துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுதர முடியும். போக்சோ சட்டம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநில அரசுகள் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் போக்சோ சட்டத்தை எளிமையாக விளக்கும் வகையில் சில காணொளிகளை உருவாக்கி யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் வலைத்தள முகவரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த காணொளிகளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் திரையிட்டு போக்சோ சட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுசார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இயக்குநரகத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன