டெல்லி: உலக வில்வித்தை போட்டியில் நாட்டிற்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வீராங்கனைகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் வெற்றிக்கு வழிவகுத்தது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இந்திய வீராங்கனைகள் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்னீத் கவுர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.