உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். செமிகண்டக்டர் எதிர்காலம் தொடர்பான கருப்பொருளுடன் செப். 13 வரை மாநாடு நடைபெறுகிறது. செமிகண்டக்டரின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் கொள்கையை வெளிப்படுத்த மாநாடு தொடங்கப்பட்டது. உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.